tamilnadu

img

சா்வதேச அறிவியல் திருவிழாவிற்கு அரசு பள்ளி மாணவா்கள் தோ்வு

திருப்பூர், நவ. 3- சா்வதேச அறிவியல் திருவிழாவிற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் நவம்பா் 4 முதல் 8 ஆம் தேதி வரை மத்திய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சா்வதேச அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து மொத்தம் 75 மாணவ, மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்த அறிவியல் திருவிழாவில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், லக்கமநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் ரா.ரகு, தி.மாதவன், து.மணிகண்டன், செ.குமரன் மற்றும் செ.நவீன்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனா். இம்மாணவா்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தே.மரியலூயிஸ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.